தை பூக்குதே (694)

Selvi Nithiaanandan

தை பூக்குதே

மாதங்கள் பன்னிரண்டாய் ஆனதே
மகிழ்ச்சியும் மனதுக்குள் பொங்கியே
மழையுடன் குளிரும் வந்திடவே
தைமாதம் மீண்டும் முடிவானதே

புதிய வரவு தையுமாய் பிறந்திட
புதுப் பொருளால் செலவும்கூடவே
புத்துணர்வும் வரவழைத்து நாமும்
புதிய படைப்பும் படைத்திடலாமே

பட்டாசு சத்தத்துடன் தைபிறக்குமே
பரவசத்தில் மக்கள்குழாம் நிற்க்குமே
பன்னிரெண்டு வரும்வரை தெருவினிலே
பண்டிகைபோல் கொண்டாடும் உலகினிலே

வீடுகள்வீதிகள் எங்குமே விளக்குகள்
விற்பனைக்கு போட்டிபோடும் பொருள்கள்
தைபிறக்கவே புதுப்புது அறிமுக விநியோகம்
உருவாக்கும் பலபடைப்பின் விவேக உத்வீகம்

ஆரோக்கியமான புத்தாண்டாய் பிறக்கவே
ஆயுள்குறுகாமல் பலருக்கும் நீடிக்கவே
ஆனந்தமாய் அனைவருக்கும் பிறக்கவே
அவனியில் மகிழ்ச்சி நிலைக்கணும்

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றம் கண்டிட பலரது இணைப்பு மாறுமோ வேண்டிட சிலரது பிணைப்பு காட்டிடும் ஆர்வமும் கவிதையின் முனைப்பு கண்ணியம் காட்டியே காவிடும்...

Continue reading