10
Jul
தாங்கமுடியவில்லை..!!
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
புழுதி வாரி எழும் மண் வாசம்
புழுதி வாரி எழும் மண்வாசம்
புகழைத் தந்த நல்வாசம்
அகத்தில் அன்பு பொழிந்திடவே
அமைதி கிடைத்த நன் நாளே!
ஆழ்கடலில் முத்தாக ஆனமட்டும் வித்தாக
ஆற்றல் தேடி வந்தோமே அல்லல் பல சுமந்தோமே!
காற்று அடிக்கும் வேளையிலே
கன்னி மனதில் ஆசையிலே;
ஆற்றின் ஓரம் அமைதி கண்டு
ஆனந்தத்தில் மிதந்தோமே!
பாட்டுப்பாடி மகிழ்ந்திருந்து
பாதையோரம் நிலாவெளிச்சம்
நாற்று நட்டு உழைத்த காலம்
நாளை வருமா? அந்த நாளும் ?
நகுலா சிவநாதன்1709
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.