பெருவலி சுமந்த பேரிடர்……

ரஜனி அன்ரன் (B.A)...பெருவலி சுமந்த பேரிடர்.. 14.05.2026 மேபதினெட்டு மேதினியின் கரிநாள் பெருவலிசுமந்த கண்ணீரின் காவியநாள் வெறும்...

Continue reading

நகுலா சிவநாதன்

புழுதி வாரி எழும் மண் வாசம்

புழுதி வாரி எழும் மண்வாசம்
புகழைத் தந்த நல்வாசம்
அகத்தில் அன்பு பொழிந்திடவே
அமைதி கிடைத்த நன் நாளே!

ஆழ்கடலில் முத்தாக ஆனமட்டும் வித்தாக
ஆற்றல் தேடி வந்தோமே அல்லல் பல சுமந்தோமே!

காற்று அடிக்கும் வேளையிலே
கன்னி மனதில் ஆசையிலே;
ஆற்றின் ஓரம் அமைதி கண்டு
ஆனந்தத்தில் மிதந்தோமே!

பாட்டுப்பாடி மகிழ்ந்திருந்து
பாதையோரம் நிலாவெளிச்சம்
நாற்று நட்டு உழைத்த காலம்
நாளை வருமா? அந்த நாளும் ?

நகுலா சிவநாதன்1709

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading