இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

நகுலா சிவநாதன்

நிமிர்வின் சுவடுகள்

முதுமை படைக்கும் மூத்தோர் படைப்பு
வதுவை வாழ்வின் வற்றாச் சுரங்கம்
ஆக்கலின் படைப்பும் ஆளுமைத் தெளிவும்
தேக்கமின்றி தேசத்தில் வாழ
ஊக்க உளிகளாய் உறுதியே யாக்கும்

நிமிர்வின் சுவடுகள்
நிழலின் வார்ப்புகள்
எழிலின் வனப்புக்களாய்
ஏற்றத்தின் ஆணிவேர்

முதுமை புதுமை படைக்கும் சிற்றுளி
பெருமையாக்கும் பேராற்றல்
முதுமையின் சுவடுகளை
முனைப்போடு போற்றுவோம்.

நகுலா சிவநாதன்1711

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading