நகுலா சிவநாதன்

நிமிர்வின் சுவடுகள்

முதுமை படைக்கும் மூத்தோர் படைப்பு
வதுவை வாழ்வின் வற்றாச் சுரங்கம்
ஆக்கலின் படைப்பும் ஆளுமைத் தெளிவும்
தேக்கமின்றி தேசத்தில் வாழ
ஊக்க உளிகளாய் உறுதியே யாக்கும்

நிமிர்வின் சுவடுகள்
நிழலின் வார்ப்புகள்
எழிலின் வனப்புக்களாய்
ஏற்றத்தின் ஆணிவேர்

முதுமை புதுமை படைக்கும் சிற்றுளி
பெருமையாக்கும் பேராற்றல்
முதுமையின் சுவடுகளை
முனைப்போடு போற்றுவோம்.

நகுலா சிவநாதன்1711

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading