இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

நகுலா சிவநாதன்

நாதம்

நாதமான இசையைக் கேட்க
நாளும் மனது இனிமையே
ஓதும் வேதம் நாதமாக
ஓசை யங்கு மிளிருதே
நாதமான இசையினையே
நாதன் ஈசன் விரும்புவான்
சூது வாது அற்று நீயும்
சுடராய் பாடும் பாடல்
நாதமாக இசைக்குதே
நல்ல கீதம் பொழியுதே

தென்றலாக இசையுமே
தேனாய்க்காதில் ஒலிக்குதே
மன்றம் அதிரும் இன்னிசை
மனதை தூய்மை ஆக்குதே

நகுலா சிவநாதன்

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading