நகுலா சிவநாதன்

பொசுங்கிய தீயும் பூத்திட்ட பொலிவும்

பொலிவாய் புதுமை தந்த நூலகம்
பொழுதிலும் நிறைத்த அறிவுப் பெட்டகம்
வலிந்து தீயோர் அழித்த கூடம்
வளர்ந்து வருகிறதே அறிவின் தென்றலாய்

ஆசியா கண்ட அருமபெரும்; நூலகம்
தேசிய பரப்பினை நிறைத்திட்ட நாலகம்
பல்லாயிரம் தமிழரை உயர்த்தய ஏணி
பாருக்கே பெருமை தந்த தோணி

தாயக மக்களின் கனவுச் சுரங்கம்
தாராள அறிவினை ஊட்டிய மையம்
பொசுக்கிய தீயில் மடிந்து மாண்டாலும்
நசுக்கிய உள்ளங்கள் நலிந்தே சென்றதே!

சாம்பலின் மேட்டில் சரித்திரம் படைத்தே
தாங்கி நிமிர்ந்து நிற்கிறது பெருமையுடன்
எம்மை வளர்த்த எழில் நூலகமே
உம்மின் பெருமையை உலகில் கண்டோமே

நீண்ட வாழ்வில் நிமிர்ந்து நின்று
தீண்டும் கல்வி விருட்சம் காண
மீண்டும் ஒரு பொசுக்கும் தீ வேண்டாம்
நீண்டு புதுப்பொலிவு கொண்டே எழுக!

நகுலா சிவநாதன்1723

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading