இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

நகுலா சிவநாதன்

கொண்டாட்ட கோலங்கள்

வாழ்க்கையின் வழிமுறைகள்
வாழ்வின் வண்ணக் கோலங்கள்
தாழ்விலா வாழ்வுக்கு மகிழ்வின்
தன்னம்பிக்கை கொண்டாட்டங்கள்

தைபொங்கல் புத்தாண்டு தளிர்நடை
போட்டு வந்த கொண்டாட்ட கோலங்கள்
பகலவனின் உயிர்ரொளி பாருக்குப் பாச்சும்
பண்பாட்டு கோலங்கள் விழுமிய கொண்டாட்டம்

உறவுகளை இணைக்க
உணர்வுகளைப் பகிர்ந்திட
திறன்களை வெளிப்படுத்த
தித்திப்பாய் வாழ
கொண்டாட்ட மின்னல்கள்
கோலாக வைபவங்களே!

உழைத்த மனிதனுக்கு ஓய்வின் துளிகளும்
ஒய்யார எண்ணங்களும் களியாட்ட மனங்களும்
காசினினில் ஆட்டம் பாட்டம் ஆனந்தம்
அத்தனையும் உற்சாகம் தரும்
கொண்டாட்ட கோலங்களே!

நகுலா சிவநாதன்1646

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading