சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

நகுலா சிவநாதன்

தடைகளை எதிர்த்து முன்னேறு

தடைகள் எதிர்த்து முயன்றே!
தகுதியை வளர்த்துக் கொண்டிடுக!
படைகள் போலத் தடையும்
பலமாய் வந்து மோதினாலும்
நடையாய் வரும் நம்பிக்கை
நாளை பெருகும் தடையுடைத்து
குடைபோல் விரியும் குணமே
குலமாய் விளங்கும் நல்லறிவாய்

அல்லும் பகலும் உழைத்தே
அனைத்தும் ஆக்கு அறுவடையாய்
சொல்லும் செயலும் துணிவாய்த்
தொடரும் பயத்தைக் களைந்திடுக!
கல்லும் சொல்லும் கவிபோல்
கன்னித் தமிழும் மின்னிடுமே!
வெல்லும் இந்த உலகில்
வேராய் அறுப்பாய் தடைதனையே!

வார்க்கும் முகிலும் மழையாய்
வாடும் பயிர்க்கு நன்நீரே!
பார்க்கும் காட்சி படமாய்
பாலம் போடும் நுண்மாட்சி
ஏருடன் உழவன் பாடும்
ஏற்றமே காணும் நன்மாட்சி
பாருடன் படுமே முயற்சி
பாதையை அமைக்க துணிந்திடுநீ

நகுலா சிவநாதன் 1648

Nada Mohan
Author: Nada Mohan