பள்ளிப் பருவத்திலே-70

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 22-05-2025 பள்ளிப் பருவத்திலே புத்தகப் பையும் சீருடையும் புன்னகை கலந்த முகப்பொலிவும் எத்திசை பார்க்கிலும் தோழிகளும்...

Continue reading

நகுலா சிவநாதன்

பிரிவு துயர்

கவிதையில் முழக்கமிடும் பெண்ணிவள்
கனவாய் கருத்துகள் மொழியும்
புதுமையிலும் சொற்கள் நிழலாடும்
பூட்டிய பெ ண்களின் சீர்மைபேசும்
வதுவையாய் வண்ணத் தமிழ் நேசிப்பு
வாஞ்சையாய் கவிகளின் கோர்ப்பு
பதுமையாய் மறைந்த சோதரி கோசல்யா
பாரில் நினைக்கும் தருணமிது

தமிழின் பழமைச் சொற்கள் பலதும்
அணியும் இவள் கவிகள்
தினமும் பெண்ணியம் திகட்டா பேசும்
வனப்பும் வாழ்வும் முடங்கினாலும்
மனமும் நேசிப்பும் கவிதைக் கனலில்
மண்ணில் மடிந்தாலும் எண்ணத்தில்
நிழலாடும் இவள் கோசல்யா சகோதரி
நினைவில் என்றும் நீங்காநிழலாய்

நகுலா சிவநாதன்

Nada Mohan
Author: Nada Mohan