” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

நகுலா சிவநாதன்

பிரிவு துயர்

கவிதையில் முழக்கமிடும் பெண்ணிவள்
கனவாய் கருத்துகள் மொழியும்
புதுமையிலும் சொற்கள் நிழலாடும்
பூட்டிய பெ ண்களின் சீர்மைபேசும்
வதுவையாய் வண்ணத் தமிழ் நேசிப்பு
வாஞ்சையாய் கவிகளின் கோர்ப்பு
பதுமையாய் மறைந்த சோதரி கோசல்யா
பாரில் நினைக்கும் தருணமிது

தமிழின் பழமைச் சொற்கள் பலதும்
அணியும் இவள் கவிகள்
தினமும் பெண்ணியம் திகட்டா பேசும்
வனப்பும் வாழ்வும் முடங்கினாலும்
மனமும் நேசிப்பும் கவிதைக் கனலில்
மண்ணில் மடிந்தாலும் எண்ணத்தில்
நிழலாடும் இவள் கோசல்யா சகோதரி
நினைவில் என்றும் நீங்காநிழலாய்

நகுலா சிவநாதன்

Nada Mohan
Author: Nada Mohan