இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

நகுலா சிவநாதன்

நல்லூர் கந்தா!

பற்றுக் கொண்ட கந்தனவன்
பாரின் எமையே காத்தவனே!
கற்றுக் கொண்ட காலத்திலே
கனிவாய் எமக்கு அருளியவா
பெற்றுக் கொண்டோம் உன்னருளை
பேறு பெறவே துணையானாய்
முற்றும் உனையே வணங்குகின்றோம்
முருகா உந்தன் கொடிநாளில்

காத்தான் எங்கள் கந்தவேளே!
கருணை தந்த பெருவேளே
பூத்த மனதில் பதிந்திட்டாய்
புனிதம் பேணும் நல்லூரான்
சாத்தும் மலரின் நறுமணத்தே
சாந்தம் வீசும் உன்காற்றே
காத்த எங்கள் கருணைக்கடல்
காலம் யாவும் அருளுகந்தா

வேலனே உன்னை வேண்டிடவே
வெம்மை குறைத்தே காப்பாற்று
சாலவுமே வாழ்வில் சாதிக்க
சகல வழிகளில் கைகொடுப்பாய்
பாலனே பசுமை தளிர்த்துஎழ
பாரில் வறுமை ஒளித்திடுவாய்
ஞாலவும் உனையே வேண்டிடுவேன்
நன்மை செய்து நலங்காப்பாய்

நகுலா சிவநாதன்1731

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading