நகுலா சிவநாதன்

வழிகாட்டிகள்

கற்றல் ஒன்றே உயர்வுதரும்
கற்றுக் கொடுக்க மேன்மைவரும்!
பற்றுக் கொண்டு தமிழ்மேலே
படித்தல் என்றும் நலமாகும்!
உற்றுக் கேட்டே உணர்ந்தாலே

உலகில் பெருமை பெற்றிடலாம்
கற்றுக் கொண்டே இருந்தாலே
காலம் உன்னை வாழ்த்திடுமே!

ஆண்டு பலவாய்க் கற்பித்தே
ஆசை துறந்து பயிற்றுவித்தோம்
வேண்டும் புதுமை படைத்திட்டே
வேராய் அறிவை யூட்டிநின்றோம்
தாண்டுங் காலம் தடையின்றித்
தமிழே அறமாய்க் கொடுத்திட்டால்
நீண்டு வாழும் திறன்பெற்றுப்
நிலையாய்ப் புவியில் வாழ்ந்திடலாம்

நகுலா சிவநாதன் 1734

Nada Mohan
Author: Nada Mohan

    சக்தி சிறினிசங்கர் சிறுமைகளை அகற்றிடவே பொங்கு சினத்தினையே களைந்திடவே பொங்கு கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால் உறுத்துமட்டும்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பொங்குவாய்... நிறைமதியாண்டாய் நித்தம் மகிழ்வாய் வரவுகள் சீராய் வளர்மதி வையமாய் வற்றாத கல்வியாய் உலகியல் ஐக்கியம் உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே புலத்திலும்...

    Continue reading