” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

நகுலா சிவநாதன்

ஒளியின்றி ஒளிர்வெங்கு

கதிரவன் ஒளியாலே கவலைகள் பறந்தோடும்
பதியதன் பெருமை யாவும்
பகல்போல நிலவாகும்
உதிரத்தின் உணர்வெல்லாம்
ஊற்றாக மிளிர்ந்திடும்
வதியுமிடம் வண்ணமாய் வளமுடனே
ஒளிர்வுபெறும்

நதிபோல ஒளிபரப்பு நாநிலமும் பரந்திட
கதியாக வெளிச்சமும் கண்களை மயக்கிடும்
ஒளியின்றி ஒளிர்வெங்கு நிலைக்கும்
மதியாலே மானிடமும் மங்காமல் ஒளிரும்

ஒளியின்றி ஒளிராது நம்வாழ்வு;
வழியின்றி வாழ்க்கையும் நகராது
பழியின்றி ;நம்பயணம் பாடுகளாய் நகர
வளியொன்று வேண்டுமே வளமான ஒளியாலே!

நகுலா சிவநாதன்1738

Nada Mohan
Author: Nada Mohan