தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

நகுலா சிவநாதன்

உறைபனி

உறைகின்ற வெண்பனியே கொட்டுகிறாய்
உணர்வாக உள்ளமதை சீண்டுகிறாய்
விறைப்பாக உடலும்தான் இருக்கிறது
விண்ணதிர மழையாகப் பொழிகிறாய்
கறையாக மண்மீது வெண்பட்டுநீ
கலையாக உன் விழுகை அழகுதான்
நிறைகின்ற நீரையே கட்டியாக்கி
நிறைவாக உறைகிறாய் புவிமேலே

பனியாகப் பொழிகின்ற தண்ணீரே
பகலவனின் அருளாலே திண்மமாய்நீ
உருகுகின்ற உன் எழிலே அழகு
உழவர்க்கு செழிப்பாகும் உன்நீரின் வருகை
மண்மீது மழைத்துளியாய் பூம்பனியே
மாறுகின்ற காலத்தில் மகிழ்வாய்நீ
தண்ணொளியும் குறையுமிந்த மாதம்
தருக்களும் குறைக்குமே இலைகளைத்தானே!

நகுலா சிவநாதன்1741

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading