இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

நகுலா சிவநாதன்

வாழும் காதல்

வாழும் காதல் வையமதில்
வானம் அளவு வளரட்டும்
சூழும் தொல்லை அகன்றிடவே
சுடராய் காதல் மிளிரட்டும்
ஆளும் அரங்கு அவனியிலே
அரும்பும் காதல் மலரட்டும்
நாளும் மலரும் நல்லன்பு
நலமே வாழ்வில் ஓங்கட்டும்

காதல் என்றும் பொழியட்டும்
கனிவு என்றும் மலரட்டும்
மோதல் இல்லா மோகனங்கள்
மோதி அன்பு பெருகட்டும்
நாதம் தருமே இன்பவாழ்வு
நன்றாய் ஓங்கி வளரட்டும்
வேதம் சொல்லும் காதலின்று
வேண்டும் வாழ்வின் சொருக்கமாக!

நகுலா சிவநாதன் 1748

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading