நகுலா சிவநாதன்

வாழும் காதல்

வாழும் காதல் வையமதில்
வானம் அளவு வளரட்டும்
சூழும் தொல்லை அகன்றிடவே
சுடராய் காதல் மிளிரட்டும்
ஆளும் அரங்கு அவனியிலே
அரும்பும் காதல் மலரட்டும்
நாளும் மலரும் நல்லன்பு
நலமே வாழ்வில் ஓங்கட்டும்

காதல் என்றும் பொழியட்டும்
கனிவு என்றும் மலரட்டும்
மோதல் இல்லா மோகனங்கள்
மோதி அன்பு பெருகட்டும்
நாதம் தருமே இன்பவாழ்வு
நன்றாய் ஓங்கி வளரட்டும்
வேதம் சொல்லும் காதலின்று
வேண்டும் வாழ்வின் சொருக்கமாக!

நகுலா சிவநாதன் 1748

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading