நன்றிப் பாமாலை

நேவிஸ் பிலிப் கவி இல(150) 10/10/24

பொங்கு புகழ் துலங்கும்
பாமுக மன்றத்திலே
வியாழன் கவி நேரம்
என் படைப்பு “150”

தயங்கும் மனதுடனே அன்று
தத்தி நடை பயின்றேன்
வருமா என்ற கேள்வியுடன்
தொடர்ந்தேன் முதல் கவிதை

வராதென்ற நினைவுடனே
ஒதுங்கி நான் நின்றிருப்பின்
வந்திராது இப் படைப்பு
பெருமிதமும் என்னுள்ளே

மலர்ந்த நட்புக்கள்
தொடர்ந்தன பாசமுடன்
வாழ்த்தும் நெஞ்சங்களின்
அன்பு மழையில் சிலிர்க்கின்றேன்

பாமுகத்தை நாடுகிறேன் நாளும்
நன்றியோடு நினைக்கின்றேன்
ஊக்குவிக்கும் நெஞ்சங்களை
மனம் நெகிழ்ந்து வாழ்த்துகன்றேன்
நன்றி நன்றி நன்றி
வணக்கம்.

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

Continue reading