மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

நன்றிப் பாமாலை

நேவிஸ் பிலிப் கவி இல(150) 10/10/24

பொங்கு புகழ் துலங்கும்
பாமுக மன்றத்திலே
வியாழன் கவி நேரம்
என் படைப்பு “150”

தயங்கும் மனதுடனே அன்று
தத்தி நடை பயின்றேன்
வருமா என்ற கேள்வியுடன்
தொடர்ந்தேன் முதல் கவிதை

வராதென்ற நினைவுடனே
ஒதுங்கி நான் நின்றிருப்பின்
வந்திராது இப் படைப்பு
பெருமிதமும் என்னுள்ளே

மலர்ந்த நட்புக்கள்
தொடர்ந்தன பாசமுடன்
வாழ்த்தும் நெஞ்சங்களின்
அன்பு மழையில் சிலிர்க்கின்றேன்

பாமுகத்தை நாடுகிறேன் நாளும்
நன்றியோடு நினைக்கின்றேன்
ஊக்குவிக்கும் நெஞ்சங்களை
மனம் நெகிழ்ந்து வாழ்த்துகன்றேன்
நன்றி நன்றி நன்றி
வணக்கம்.

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

Continue reading

செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

Continue reading