04
Sep
04
Sep
நன்றியாய் என்றுமே
ஜெயம்
அறிவின் சிகரத்தின் உச்சியை தொடவைத்தார்
நெறிமுறை கலந்த வாழ்க்கைக்கு வித்திட்டார்
ஏணியாய்...
04
Sep
நன்றியாய் என்றுமே……
நன்றியாய் என்றுமே........ரஜனி அன்ரன் (B.A) 04.09.2025
நன்றியென்ற ஒற்றை வார்த்தை
உள்ளத்தோடும் உணர்வோடும்...
நன்றியாய் என்றுமே……
நன்றியாய் என்றுமே……..ரஜனி அன்ரன் (B.A) 04.09.2025
நன்றியென்ற ஒற்றை வார்த்தை
உள்ளத்தோடும் உணர்வோடும் ஒன்றிணைந்தசக்தி
மூன்றெழுத்து மந்திரம் மானிடத்தின் அடையாளம்
வெறும் உதட்டில் பிறப்பதல்ல
அடிமனதின் ஆழத்தில் முகிழ்ப்பது தான்நன்றி
அன்னை தந்தை ஆசானின் சேவை
அளவிட முடியா நன்றியின் வித்தே !
நன்றியில்லா வாழ்வு வெறுமை
நன்றிகூறும் மனமே செல்வம்
நன்றியுணர்வில் மனிதம் மலரும்
பாசஉறவில் மகிழ்ச்சி பொங்கும்
நன்றியோடு வாழ்வோம் என்றும் !
சிறுதுளிஉதவி நதியாய் பெருகும்
ஒருசிறு புன்னகை பரவசமாக்கும்
நன்றியுள்ள மானிடன் இதயத்தில்
ஒன்றித்து வாசம்செய்வான் இறைவனும்
நன்றியென்ற பண்பு இல்லையென்றால்
மனிதமும் மரணித்தேவிடும்
நன்றியோடு வாழ்வோம் என்றும் !

Author: ரஜனி அன்ரன்
03
Sep
மறதி Selvi Nithianandan
மறதி என்ற நோயும்
மனம் இழக்கும் நிலையும்
மகிழ்சி தொலைத்த...
02
Sep
வணக்கம்
நியதி..
வரம்பு நிறைந்த வாழ்வியல்
வற்றாத சுரங்கமே உலகியல்
எதற்கும் உள்ளது நியதியே
எங்கும் வாழ்வது தகுதியே
இயற்கை கொடையே...
30
Aug
சிவாஜினி
சிறிதரன்
சந்தம் சிந்தும் கவிதை இலக்கம்_200
"நியதி"
நீதி நியதி கட்டுப்படு
நியாயத்தின் படி ஒழுகு
நேர்த்தியான...