மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

நன்றே அருளிடு தாயே!

நகுலா சிவநாதன்

நன்றே அருளிடு தாயே!

துணிவாய் எம்மைக் காத்திடுவாள்!
துயரங் களைந்து போற்றிடுவோம்!
கனிவாய்க் தருவாள் நல்லன்பு
காப்பாள் என்றும் கருணையுடன்
பணிவாய் பாதம் தொழுதிடவே
பயங்கள் நீக்கும் துர்க்கையம்மா!
நனிசீர் நல்கும் வீரமகள்
நன்றே அருள்வாய் நல்வரமே!

செல்வம் தருவாள் இலக்குமியே
செழிப்பு அளிப்பாள் தேவியிவள்
எல்லை யில்லா அழகிவளே
ஏற்றம் தருவாள் நற்தேவி
தொல்லை என்றும் அழிப்பவளே
தொடர்ந்து அருளும் நல்லவளே
சொல்லால் பாக்கள் பாடுகிறேன்
சோதி வடிவ தேவியிவள்

கல்வி தருபவள் கலைமகளே!
காட்சி யளிக்கும் நம்தேவி
வில்லை வளைக்கும் நாணாக
விரைந்து அறிந்து கொடுப்பவளே
முல்லை சோசா செவ்வந்தி
முனைப்பாய் சாத்தும் நற்பூக்கள்
எல்லை யில்லா பெருஞ்சோதி
என்றும் அருள்வாள் நற்கருணை

நகுலா சிவநாதன் 1781

Nada Mohan
Author: Nada Mohan

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading