” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

நன்றே அருளிடு தாயே!

நகுலா சிவநாதன்

நன்றே அருளிடு தாயே!

துணிவாய் எம்மைக் காத்திடுவாள்!
துயரங் களைந்து போற்றிடுவோம்!
கனிவாய்க் தருவாள் நல்லன்பு
காப்பாள் என்றும் கருணையுடன்
பணிவாய் பாதம் தொழுதிடவே
பயங்கள் நீக்கும் துர்க்கையம்மா!
நனிசீர் நல்கும் வீரமகள்
நன்றே அருள்வாய் நல்வரமே!

செல்வம் தருவாள் இலக்குமியே
செழிப்பு அளிப்பாள் தேவியிவள்
எல்லை யில்லா அழகிவளே
ஏற்றம் தருவாள் நற்தேவி
தொல்லை என்றும் அழிப்பவளே
தொடர்ந்து அருளும் நல்லவளே
சொல்லால் பாக்கள் பாடுகிறேன்
சோதி வடிவ தேவியிவள்

கல்வி தருபவள் கலைமகளே!
காட்சி யளிக்கும் நம்தேவி
வில்லை வளைக்கும் நாணாக
விரைந்து அறிந்து கொடுப்பவளே
முல்லை சோசா செவ்வந்தி
முனைப்பாய் சாத்தும் நற்பூக்கள்
எல்லை யில்லா பெருஞ்சோதி
என்றும் அருள்வாள் நற்கருணை

நகுலா சிவநாதன் 1781

Nada Mohan
Author: Nada Mohan