03
Mar
எங்கே அமைதி
தன் இதயக் கதவை பூட்டி வைத்து
அண்டம் முழுவதும் அலைகின்றான் அமைதியைத் தேடி...
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
03-03-2026
வலிகள் யாவும் பனித்துளியாய்
விடியலில் கலைந்து சென்றிடுமே
நலிதல் அற்று வாழ்வாயானால்
நலமே பெற்று துளிர்வாய் நீ
ஓய்வு இங்கு முடக்கமல்ல
ஆய்வு கொண்டு எழுந்து வா
நேர்மறை எண்ணம் நிறைவைத்தர
நின் மதியும் உம்மைப் பெற
மனவுறுதி என்னும் மருந்தால்
மகிழ்வுடன் பிணிகளை வென்றிடு
மன அமைதியோடு நடை பயிற்சி
மன அழுத்தத்தை அகற்றிடுமே
கடமைகள் கொஞ்சம் காத்திருக்கு
கனவுகளும் சேர்ந்திருக்கு -பெண்ணே
நலம் பெற வேண்டி வணங்குகின்றேன்
ஞானிலம் சிறக்க வந்திடு நீ
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.