29
Apr
கார் மேகங்கள் காற்றில் கலந்து
கால நிலை மாறி பருவ மழையில்
மண் மனைந்து உழவர்...
29
Apr
புழுகு வெடி (392) 30.04.2026
ராணி சம்பந்தர் ஜேர்மனி
புழுகு வெடி
சேற்றிலே மலர்ந்தாலும்
செந்தாமரை அழகானது
காற்றிலே...
29
Apr
சித்திரா பருவம் 760 30.04.2026
செல்வி நித்தியானந்தன்
சித்திரா பருவம்
அன்னையருக்கு வருடம் ஒருமுறை
அழகாய் வந்திடும் விரதமாகும்
ஆலயங்களில் சித்திரைக் கஞ்சி
அகமே நிறைந்து...
நாதன் கந்தையா 16.5.23
பெற்றவள்.
————————-
மீண்டு புவிமீது
வெண்மதியாய் வலம்வந்து
கூண்டாய் மடியிருத்தி
கோதி முலையூட்டி
வானைப்போல்
வளியைப்போல் – என்
வலம் இடம் அறிந்தவளே.
விஞ்ஞானம் மெய்ஞானம்
எஞ்ஞானம் என்றாலும்
உன் ஞானம் ஒன்றேதான்- என்
உள் நெஞ்சுள்
ஓங்காரம் ஆனவளே.
மெல்லத்திருவாகி
மேவி நின்ற பொற்பதமே.
மண்ணில் நடைபயின்ற
மாலை குளிர் காற்றே
மலராய் சந்தனமாய் -என்
மண்டைக்குள் மணப்பவளே.
தண்ணீருள் கலந்த
பிராணன்போல் என்னுயிரில்
பின்னி பிணந்துவிட்ட
பெரும்பேறே பொக்கிசமே.
மூலம் நீயானாய்
முழுவதுமே நீதானே
காலத்தும் கடைசிவரை
காணிக்கை இல்லாமல்
காட்சி தந்த
கலைமகளும் நீதானே
தாயே தலை மகளே
தாள் பணிந்தேன் என்னுயிரே.
-நாதன் கந்தையா-
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...