” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

நாதன் கந்தையா 16.5.23

பெற்றவள்.
————————-
மீண்டு புவிமீது
வெண்மதியாய் வலம்வந்து
கூண்டாய் மடியிருத்தி
கோதி முலையூட்டி
வானைப்போல்
வளியைப்போல் – என்
வலம் இடம் அறிந்தவளே.

விஞ்ஞானம் மெய்ஞானம்
எஞ்ஞானம் என்றாலும்
உன் ஞானம் ஒன்றேதான்- என்
உள் நெஞ்சுள்
ஓங்காரம் ஆனவளே.
மெல்லத்திருவாகி
மேவி நின்ற பொற்பதமே.

மண்ணில் நடைபயின்ற
மாலை குளிர் காற்றே
மலராய் சந்தனமாய் -என்
மண்டைக்குள் மணப்பவளே.
தண்ணீருள் கலந்த
பிராணன்போல் என்னுயிரில்
பின்னி பிணந்துவிட்ட
பெரும்பேறே பொக்கிசமே.

மூலம் நீயானாய்
முழுவதுமே நீதானே
காலத்தும் கடைசிவரை
காணிக்கை இல்லாமல்
காட்சி தந்த
கலைமகளும் நீதானே
தாயே தலை மகளே
தாள் பணிந்தேன் என்னுயிரே.

-நாதன் கந்தையா-

Nada Mohan
Author: Nada Mohan