28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
நாதன் கந்தையா 16.5.23
பெற்றவள்.
————————-
மீண்டு புவிமீது
வெண்மதியாய் வலம்வந்து
கூண்டாய் மடியிருத்தி
கோதி முலையூட்டி
வானைப்போல்
வளியைப்போல் – என்
வலம் இடம் அறிந்தவளே.
விஞ்ஞானம் மெய்ஞானம்
எஞ்ஞானம் என்றாலும்
உன் ஞானம் ஒன்றேதான்- என்
உள் நெஞ்சுள்
ஓங்காரம் ஆனவளே.
மெல்லத்திருவாகி
மேவி நின்ற பொற்பதமே.
மண்ணில் நடைபயின்ற
மாலை குளிர் காற்றே
மலராய் சந்தனமாய் -என்
மண்டைக்குள் மணப்பவளே.
தண்ணீருள் கலந்த
பிராணன்போல் என்னுயிரில்
பின்னி பிணந்துவிட்ட
பெரும்பேறே பொக்கிசமே.
மூலம் நீயானாய்
முழுவதுமே நீதானே
காலத்தும் கடைசிவரை
காணிக்கை இல்லாமல்
காட்சி தந்த
கலைமகளும் நீதானே
தாயே தலை மகளே
தாள் பணிந்தேன் என்னுயிரே.
-நாதன் கந்தையா-
Author: Nada Mohan
02
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
02-06-2026
தாயுமானவரும் தாங்களே அப்பா
தரணியில் எம்மை தாங்கி காத்தவரே..
உள்ளமதில் ...
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...