18
Feb
தருவாய் தளிராய்…
வசந்தா ஜெகதீசன்
தரணி தற்காத்து தருவாய் தளிர்க்கும்
தனித்துவ நிமிர்வில் தன்னிலை தாங்கும்
பருவ எழிலில் பண்பட்டு...
பூங்காற்று
புது வெய்யில்
ஆங்காங்கே குழலோசை
குயிலார் கூவ
மாங்கு மாங்கென்று
மந்தமாய்
ஒரு கீறல் காதில்
காத்திரமாய் நிமிர்ந்த
ஆண் குருவி
கண் கெட்ட மனிதன் ஏதோ
மாற்றுகிறான்
அரசியலில் என்று
கூரைக்கு தாவியது
நோக்கியது
மத்தளச்சத்தமும் அல்ல
மரபுவழி மனித
அனர்த்தமும் அல்ல
மா மரத்தின் கீழ் இடுக்கில்
மரங்கொத்தி ஒன்று
மங்கு மாங்கென்று…..
ஆண் குருவிக்கு வியப்பு
ஏன் கூடு கட்டாமல்
மரத்தை கொத்துகிறான் என்று.
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.