மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

நாதன் கந்தையா

பூங்காற்று
புது வெய்யில்
ஆங்காங்கே குழலோசை
குயிலார் கூவ

மாங்கு மாங்கென்று
மந்தமாய்
ஒரு கீறல் காதில்
காத்திரமாய் நிமிர்ந்த
ஆண் குருவி

கண் கெட்ட மனிதன் ஏதோ
மாற்றுகிறான்
அரசியலில் என்று
கூரைக்கு தாவியது
நோக்கியது

மத்தளச்சத்தமும் அல்ல
மரபுவழி மனித
அனர்த்தமும் அல்ல
மா மரத்தின் கீழ் இடுக்கில்
மரங்கொத்தி ஒன்று
மங்கு மாங்கென்று…..

ஆண் குருவிக்கு வியப்பு
ஏன் கூடு கட்டாமல்
மரத்தை கொத்துகிறான் என்று.

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading