நினைப்பு

சக்தி சிறினிசங்கர்

சந்ததியை சிந்திக்கச் செய்த
சுந்தரத் தமிழ் வீரர்கள்
சொந்தங்களாய் எங்கள் இதயத்தில்
பந்தத்தை தந்த பசும்பொற் காவியங்கள்!
விடுதலை வயலில் விதைப்பு
அழியாத ஆத்மாக்களின் உயிர்ப்பு
ஒரு வரலாற்றுப் பதிப்பு!
ஆண்டாண்டு காலம்
அழுகுரல் ஓலம்
அழியாத சோகம்!
தாங்காத தவிப்பு
நீங்காத நினைப்பு
வையகம் வாழும்வரை
மறையாது நினைப்பு!

நன்றி வணக்கம்!

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மூதாதையரில் முழங்கியது முழங்கியவரில் புழுங்கியது புழுங்கியவரில் பூ பூத்துக் குலுங்கிய மொழியே தமிழ் பெற்றோர் தினம் பேசியது உற்றார்...

Continue reading