பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

நினைப்பு

சக்தி சிறினிசங்கர்

சந்ததியை சிந்திக்கச் செய்த
சுந்தரத் தமிழ் வீரர்கள்
சொந்தங்களாய் எங்கள் இதயத்தில்
பந்தத்தை தந்த பசும்பொற் காவியங்கள்!
விடுதலை வயலில் விதைப்பு
அழியாத ஆத்மாக்களின் உயிர்ப்பு
ஒரு வரலாற்றுப் பதிப்பு!
ஆண்டாண்டு காலம்
அழுகுரல் ஓலம்
அழியாத சோகம்!
தாங்காத தவிப்பு
நீங்காத நினைப்பு
வையகம் வாழும்வரை
மறையாது நினைப்பு!

நன்றி வணக்கம்!

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading