நினைவின் வடு (615) Selvi Nithianandan

Selvi Nithianandan

நினைவின் வடு
முள்ளி வாய்க்கால் நினைவின் வடு
முடிவின் நாளும் பதிவின் ஏடு
மூர்க்கத் தனமாய் போட்ட குண்டு
தீர்க்கத் தினமாய் எரியுது இன்றும்

இளமை முதுமை பச்சிளம் குழந்தை
இதுவரை பலருக்கு புரியாத விந்தை
இலங்கை இந்தியா கூட்டுப் பட்டறை
இரகசிய இணைவாய் மறைமுக பயிற்சி

ஈழப்போரில் உயிர்கள் இழப்பு
ஈடுகொடுத்த அப்பாவிகள் இறப்பு
பதின்னைந்து ஆண்டும் வந்ததே
பதறும் உறவுகளும் நிலையாய்

குண்டுச் சத்தம் அழகுரல் ஓசையும்
குவிந்து கிடந்த மனித உடல்களும்
குழிதோண்டி புதைக்க யாருமற்றவராய்
குருதி படிந்த நாளாய் இன்னமும் வருகுதே

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

Continue reading