நினைவின் வடு (615) Selvi Nithianandan

Selvi Nithianandan

நினைவின் வடு
முள்ளி வாய்க்கால் நினைவின் வடு
முடிவின் நாளும் பதிவின் ஏடு
மூர்க்கத் தனமாய் போட்ட குண்டு
தீர்க்கத் தினமாய் எரியுது இன்றும்

இளமை முதுமை பச்சிளம் குழந்தை
இதுவரை பலருக்கு புரியாத விந்தை
இலங்கை இந்தியா கூட்டுப் பட்டறை
இரகசிய இணைவாய் மறைமுக பயிற்சி

ஈழப்போரில் உயிர்கள் இழப்பு
ஈடுகொடுத்த அப்பாவிகள் இறப்பு
பதின்னைந்து ஆண்டும் வந்ததே
பதறும் உறவுகளும் நிலையாய்

குண்டுச் சத்தம் அழகுரல் ஓசையும்
குவிந்து கிடந்த மனித உடல்களும்
குழிதோண்டி புதைக்க யாருமற்றவராய்
குருதி படிந்த நாளாய் இன்னமும் வருகுதே

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading