திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

நினைவின் வடு (615) Selvi Nithianandan

Selvi Nithianandan

நினைவின் வடு
முள்ளி வாய்க்கால் நினைவின் வடு
முடிவின் நாளும் பதிவின் ஏடு
மூர்க்கத் தனமாய் போட்ட குண்டு
தீர்க்கத் தினமாய் எரியுது இன்றும்

இளமை முதுமை பச்சிளம் குழந்தை
இதுவரை பலருக்கு புரியாத விந்தை
இலங்கை இந்தியா கூட்டுப் பட்டறை
இரகசிய இணைவாய் மறைமுக பயிற்சி

ஈழப்போரில் உயிர்கள் இழப்பு
ஈடுகொடுத்த அப்பாவிகள் இறப்பு
பதின்னைந்து ஆண்டும் வந்ததே
பதறும் உறவுகளும் நிலையாய்

குண்டுச் சத்தம் அழகுரல் ஓசையும்
குவிந்து கிடந்த மனித உடல்களும்
குழிதோண்டி புதைக்க யாருமற்றவராய்
குருதி படிந்த நாளாய் இன்னமும் வருகுதே

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading