சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

நினைவுகள் கனக்கின்றதே

இரா.விஜயகௌரி
ஆயிரம் கனவுகள் சுமந்தது வாழ்க்கை
அனுதினம் தாய்மடி சுமந்தவர் சரிதம்
நினைந்து நினைந்து நினைவுகள் ஏந்திட
காலமும் சுழலுதுகழலடி பணிந்தே

வேரும் விழுதும் வேரடி மண்ணும்
குருதிக் கனலுள் உழன்றது கண்டீர்
உயிர்த்துளி காவிய உணர்வின் மொழியை
உயிர்ப்புடன் ஏந்திய காவலர் சென்றார்

விடியலில் எழுதிய வெந்தணல் வேட்கை
நினைவினுள் தகித்தெழ உயிர்மடி தந்தே
சாவினைத்தழுவிய சாகா வரங்கள்
சரித்திரத் தேடலில்சந்தணப் பேழைகள்

பொறித்தெழும் தடங்கள் பொய்த்ததுமில்லை
நினைத்தவை செயல்கொள தயங்கியதில்லை
தரணியின் வாழ்வை தவமாய்த் தாங்கி
தாய்மண் மீட்பினை சுமந்தன உடல்கள்

விழிகளுள் தாங்கிய விழுப்புண் சுவடுகள்
இவர் வெந்தணல் விழுங்கிய உயிர்ப்பின் தவங்கள்

Author: