நினைவுகள் கனக்கின்றன 78

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
27-11-2025

ஊமையாய் உறங்கிய
உள்ளத்து அலையெல்லாம்
கார்த்திகை பிறந்தாலே
கனக்கின்றது நினைவாலே

இறுதி மூச்சின் சத்தம்
இடி முழக்கமாய் ஒலிக்கிறது
உதிரம் கொடுத்து நீவிர்
உன்னத வாழ்வு தந்தீர்

உழுது உண்டு வாழும்
செந்தமிழ் ஈழத்திலே
உயிர்க்கொடை
எதுவென உணர்த்தி

உயர்ந்த நோக்கை
உறுதியாய் அர்பணித்த
மாவீரச் செல்வங்களுக்காய்
மண்டியிட்டு

நினைவுகள் கனக்கின்றன
நிம்மதி வெகு விரைவென
செங்காந்தள் மலரெடுத்து
செலுத்துவோம் எம்
அஞ்சலியை—

Jeba Sri
Author: Jeba Sri

சக்தி சிறினிசங்கர் சிறுமைகளை அகற்றிடவே பொங்கு சினத்தினையே களைந்திடவே பொங்கு கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால் உறுத்துமட்டும்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பொங்குவாய்... நிறைமதியாண்டாய் நித்தம் மகிழ்வாய் வரவுகள் சீராய் வளர்மதி வையமாய் வற்றாத கல்வியாய் உலகியல் ஐக்கியம் உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே புலத்திலும்...

Continue reading