நினைவுகள் கனக்கின்றன 78

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
27-11-2025

ஊமையாய் உறங்கிய
உள்ளத்து அலையெல்லாம்
கார்த்திகை பிறந்தாலே
கனக்கின்றது நினைவாலே

இறுதி மூச்சின் சத்தம்
இடி முழக்கமாய் ஒலிக்கிறது
உதிரம் கொடுத்து நீவிர்
உன்னத வாழ்வு தந்தீர்

உழுது உண்டு வாழும்
செந்தமிழ் ஈழத்திலே
உயிர்க்கொடை
எதுவென உணர்த்தி

உயர்ந்த நோக்கை
உறுதியாய் அர்பணித்த
மாவீரச் செல்வங்களுக்காய்
மண்டியிட்டு

நினைவுகள் கனக்கின்றன
நிம்மதி வெகு விரைவென
செங்காந்தள் மலரெடுத்து
செலுத்துவோம் எம்
அஞ்சலியை—

Jeba Sri
Author: Jeba Sri

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading