நிழலாடுதே நினைவாயிரம்1

என் இதயத்தை பார்வையால் உடைத்தவளே
என் மகிழ்ச்சியின் கருவினை படைத்தவளே
என் உயிருக்குள் சுகமாய் உறைந்தவளே
என் பாதையில் மலராய் நிறைந்தவளே

பூக்களின் அடியில் புதைதைத்துவிட்டாய்
தென்றலின் மடியில் தூங்கவைத்ததாய்
கனவுகள் கொண்ட இரவமைத்தாய்
அங்கு காதலைச் சொல்ல வரம் கொடுத்தாய்
என் நினைவை, சுவைத் தேனென ஆக்கிவிட்டாய்

என் வாழ்க்கைக்கு அழகு உன்னாலே
உன்னைக் கண்டதும் வந்தது தன்னாலே
உன் இரசிகனாய் மாறிய பின்னாலே
இன்பத்தின் பிரசவம் முன்னாலே
அதைக் கண்டுகொண்டேன் காதல் கண்ணாலே

ஜெயம் தங்கராஜா
29-01-2026

Author:

ராணி சம்பந்தர் மூதாதையரில் முழங்கியது முழங்கியவரில் புழுங்கியது புழுங்கியவரில் பூ பூத்துக் குலுங்கிய மொழியே தமிழ் பெற்றோர் தினம் பேசியது உற்றார்...

Continue reading