நேவிஸ்பிலிப்

கவி இல(95) 22/03/23
மூத்தோரை வாழ்த்துவோம்.

மேன்மை பொருந்திய நம் மூத்தோர் -தங்கள்
ஆளுமையால் நற் பெயர் பெற்றவர்கள்
அனுபவப் பாடம் கற்று வாழ்க்கையெனும்
பள்ளியிலே ஆசான்களானவர்கள்

பண்புடன் வாழ்தலொன்றே
பாரினில் சிறந்ததென
தாலாட்டுப் பாட்டினிலே
ஊட்டியெம்மை வளர்த்தெடுத்து

தம்மறிவுக் கூர்மையாலே
நாமும் ஞானம் பெற்றிடவே
வாழ்க்கைப் பாடம் சொல்லியே
எம்மை நல் வழி நடத்தியவர்

இன்னிசை அமைத்தார்கள்
பாக்கள் புனைந்தார்கள்
செல்வங்கள் மிகக் கொண்டும்
அமைதியில் வாழ்ந்தார்கள்

எண்ணமதை திண்ணமுற உரைத்து
ஐக்கியத்தை நிலை நாட்டி வளர்ந்து
தங்கள் வழி மரபால் மாட்சிகள் பெறும் —எம்
முன்னோரை வாழ்த்துதல் முறையாமே.
நன்றி வணக்கம்.

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெயம் நியதி நடப்பவைதான் நடக்குமென்பது காலதேவன் கணக்கு கடந்துபோகும்  நாட்களெல்லாமதை சொல்லிவிடும் உனக்கு தலைகீழாய் நடப்பினும் நிகழவேணுமென்பதே...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் நியதி காலத்தின் நியதி கட்டாயமாகும் ஞாலத்தின் நியதி மாறுபாடாகும் பாலமாய் நியதி இணைவாகும் கோலமாய் நியதி வேறுபாடாகும் வாழ்வின் சக்கரம் வரமாகும் வீழ்வதும் உயர்வதும் பாடமாகும் விதியின் விளையாடல் எதுவாகும் விடை புரியாதென்பதே இருப்பாகும் மதியின்...

    Continue reading