தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

நேவிஸ்பிலிப்

கவி இல(95) 22/03/23
மூத்தோரை வாழ்த்துவோம்.

மேன்மை பொருந்திய நம் மூத்தோர் -தங்கள்
ஆளுமையால் நற் பெயர் பெற்றவர்கள்
அனுபவப் பாடம் கற்று வாழ்க்கையெனும்
பள்ளியிலே ஆசான்களானவர்கள்

பண்புடன் வாழ்தலொன்றே
பாரினில் சிறந்ததென
தாலாட்டுப் பாட்டினிலே
ஊட்டியெம்மை வளர்த்தெடுத்து

தம்மறிவுக் கூர்மையாலே
நாமும் ஞானம் பெற்றிடவே
வாழ்க்கைப் பாடம் சொல்லியே
எம்மை நல் வழி நடத்தியவர்

இன்னிசை அமைத்தார்கள்
பாக்கள் புனைந்தார்கள்
செல்வங்கள் மிகக் கொண்டும்
அமைதியில் வாழ்ந்தார்கள்

எண்ணமதை திண்ணமுற உரைத்து
ஐக்கியத்தை நிலை நாட்டி வளர்ந்து
தங்கள் வழி மரபால் மாட்சிகள் பெறும் —எம்
முன்னோரை வாழ்த்துதல் முறையாமே.
நன்றி வணக்கம்.

Nada Mohan
Author: Nada Mohan

    சந்த கவி இலக்கம் _196 சிவாஜினி சிறிதரன் "களவு" பசி பட்டினி பஞ்சத்தால் களவு பாத்திருந்து திருடுபவர் வழித்தெருவில் கொள்ளையடிப்பு! உழைக்க பிழைக்க...

    Continue reading