திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

நேவிஸ்பிலிப்

கவி இல(95) 22/03/23
மூத்தோரை வாழ்த்துவோம்.

மேன்மை பொருந்திய நம் மூத்தோர் -தங்கள்
ஆளுமையால் நற் பெயர் பெற்றவர்கள்
அனுபவப் பாடம் கற்று வாழ்க்கையெனும்
பள்ளியிலே ஆசான்களானவர்கள்

பண்புடன் வாழ்தலொன்றே
பாரினில் சிறந்ததென
தாலாட்டுப் பாட்டினிலே
ஊட்டியெம்மை வளர்த்தெடுத்து

தம்மறிவுக் கூர்மையாலே
நாமும் ஞானம் பெற்றிடவே
வாழ்க்கைப் பாடம் சொல்லியே
எம்மை நல் வழி நடத்தியவர்

இன்னிசை அமைத்தார்கள்
பாக்கள் புனைந்தார்கள்
செல்வங்கள் மிகக் கொண்டும்
அமைதியில் வாழ்ந்தார்கள்

எண்ணமதை திண்ணமுற உரைத்து
ஐக்கியத்தை நிலை நாட்டி வளர்ந்து
தங்கள் வழி மரபால் மாட்சிகள் பெறும் —எம்
முன்னோரை வாழ்த்துதல் முறையாமே.
நன்றி வணக்கம்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading