முயற்சியே பலம் முனைப்பே திடம்

செல்வி நித்தியானந்தன் முயற்சியே பலம் முனைப்பே திடம் மானிட பிறப்பின் மகத்தான பலமே மனஉறுதி என்றுமே திடமான முனைப்பே முயற்சியின் பயனே முற்றிலும்...

Continue reading

பெருவலி சுமந்த பேரிடர்……

ரஜனி அன்ரன் (B.A)...பெருவலி சுமந்த பேரிடர்.. 14.05.2026 மேபதினெட்டு மேதினியின் கரிநாள் பெருவலிசுமந்த கண்ணீரின் காவியநாள் வெறும்...

Continue reading

நேவிஸ்பிலிப்

கவி இல(95) 22/03/23
மூத்தோரை வாழ்த்துவோம்.

மேன்மை பொருந்திய நம் மூத்தோர் -தங்கள்
ஆளுமையால் நற் பெயர் பெற்றவர்கள்
அனுபவப் பாடம் கற்று வாழ்க்கையெனும்
பள்ளியிலே ஆசான்களானவர்கள்

பண்புடன் வாழ்தலொன்றே
பாரினில் சிறந்ததென
தாலாட்டுப் பாட்டினிலே
ஊட்டியெம்மை வளர்த்தெடுத்து

தம்மறிவுக் கூர்மையாலே
நாமும் ஞானம் பெற்றிடவே
வாழ்க்கைப் பாடம் சொல்லியே
எம்மை நல் வழி நடத்தியவர்

இன்னிசை அமைத்தார்கள்
பாக்கள் புனைந்தார்கள்
செல்வங்கள் மிகக் கொண்டும்
அமைதியில் வாழ்ந்தார்கள்

எண்ணமதை திண்ணமுற உரைத்து
ஐக்கியத்தை நிலை நாட்டி வளர்ந்து
தங்கள் வழி மரபால் மாட்சிகள் பெறும் —எம்
முன்னோரை வாழ்த்துதல் முறையாமே.
நன்றி வணக்கம்.

Nada Mohan
Author: Nada Mohan