” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

நேவிஸ் பிலிப்

கவி இல(102) 11/05/23
வெறுமை போக்கும் பசுமை

ஒரு விதை போதுமே
காணுமிடமெல்லாம்
பசுமை படரந்து
பூமி செழிக்க

வெறுமை போக்கும் பசுமை
இயற்கையன்னையின் பரிசு
பூமித் தாய்க்கு விரித்த
அழகு கண்டு

தாவரங்கள் தலையசைக்க
பூ மரங்கள் பூத்துக் குலுங்க
இயற்கையின் ஒளி சுடர
பூமி மீண்டும் பூத்தது

உயருக்கு ஆதாரமாய்
பசுமையின் பச்சையமாய்
செங்குருதி வியர்வையாய்
சொரிந்த இடமெல்லாம்

வயல்கள் வளமாக
நெற் பயிர்கள் வளர்ந்து வர
வெறுமை போக்கும் பசுமை
காற்றினிலே ஆடி வரும்
அழகோ தனியழகு
நன்றி வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan