நேவிஸ் பிலிப்

கவி இல (103) 25/05/23
பொசுக்கிய தீயும் பூத்திட்ட பொலிவும்

தமிழின கல்வியறிவின் ஆதாரம்
தீ மூட்டி எரித்ததனால் சேதாரம்
தமிழின அழிப்பின்அடையாளம்
தீயில் பொசுங்கிய கருவூலம்

மொழி அழிந்தால்
இனமும் அழிந்திடும் என
நினைத்த வெறியரின்
கற்பனை சுக்குநூறாய் சிதற

தமிழன் தலை நிமிர்ந்தான்
வெட்ட வெட்ட துளிர்க்கும் மரம்போல
வேண்டும் மீண்டும் நூலகமென
அறிஞர்கள் கலைஞர்கள் பலத்தோடு

ஆண்டுகள் நாற்பது கடக்க
சாம்பலில் பூத்த மலரென
புதுப் பொலிவுடன் நிமிருது
பிரமிப்பாய் பிரமாண்டமாய்
யாழ்பொது நூலகம்

மதங்களைக் கடந்து
மொழியை முன்னிறுத்த
தமிழ்த்தாய் சிலைக்குப் பதிலாய்
கல்வித் தாய் சரஸ்வதியின் உதயம்
நூலகத்திற்கே பெருமை சேர்க்குது

நன்றி வணக்கம்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading