சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

நேவிஸ் பிலிப்

கவி இல ) (8 5). 01/12/22
உயிர் நேயம்

எவ்வுயிரும் தன்னுயிராய்
உயிர் நேயம் காக்கும் மனித நேயம்
துன்புறும் வேளையிலே
துணைக் கரம் நீட்டி வரும்

அன்பினை அள்ளித் தரும்
அன்புடன் அரவணைத்து
அன்பாய் அணைத்துக் காக்கும்
அதுவே நல் மனித நேயம்

உயிர்களுக்கு ஊறு நேரின்
உள்ளம் கசிந்துருகி
சாதி மத பேதமின்றி
மானிட தர்மம் காக்கும்

இன்றோ துடிக்கும் உயிர் காக்க
துணைக் கரம் ஏதுமில்லை
எரியும் நெருப்பணைக்க
அன்புக்கரம் தானுமில்லை

உயிர் நேயம் காக்கும்
மனித நேயமெங்கே
மனிதன் இருக்கின்றான்
மரத்துப் போன இதயத்தோடு்
நன்றி . வணக்கம்.

Nada Mohan
Author: Nada Mohan