நேவிஸ் பிலிப்

கவி இல(119) 25/01/24
ஆதங்கம்

என்னவளே,
எனைத் தாங்கும் நல்லவளே
உனக்காக நானும் எனக்காக நீயுமென
வாழ்கின்றோம் ஒன்றாய்

என் துடிப்பால் நீ இயங்க
உன்உழைப்பால் நான் துடிக்க
நீ விடும் மூச்சுக் காற்று இல்லையெனில்
நான்என்று ஒன்றுமில்லை

உழைத்து உழைத்து களைத்து விட்டால்
உன் உடம்பு தளர்ந்திடுமே
அயராது ஓடி ஓடி என்
நாடியும் ஒடுங்கிடுமே

உனக்காகத் துடிக்கின்றேன் நான்
நீ்என்னை வாழ வைப்பாய் என்று
எனக்காக நீயும் உனக்காக நானும்
இருக்கும் வரை வாழ்ந்திடுவோம்
இருந்தாலும் மடிந்தாலும் ஒன்றாகவே

நன்றி வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading