ஆளுகின்றான் அடிபணிகின்றோம்..!!

வியாழன்கவி 2300!! ஆளுகின்றான் அடிபணிகிறோம்!! வாழுகின்ற வாழ்க்கையிலே வழி நெடுக பயணிப்பான் ஆளுகின்ற அழுத்தக்காரன் வீழ்ந்திடுவான் உழைப்பாலே சோம்பலென்று கிடந்தாலோ தூரம்...

Continue reading

வரமாகும் வாய்ப்புக்களே

இரா.விஜயகௌரி வரமாகும் வாய்ப்புக்கள் அவை தடமாகும் செயல் தழுவின் உரமாய் நாம் பயன்கொள்ளின் உரைத்தெழுதும் நம் தடங்கள் வாய்த்ததெல்லாம்...

Continue reading

நோயற்ற வாழ்வே..

சிவதர்சனி இரா

வியாழன் கவி 2100!

நோயற்ற வாழ்வே..!!
கோடி கோடியாய்
உழைத்தே குவித்தாலும்- உடல்
வாடி வதங்கும் நோய்
பிடி விட்டு விலகுமோ- நாடி
நாளம் அடங்கிப் போகும்
நல்ல தேக ஆரோக்கியமின்றி..

வித விதமாய்ப் பரவும்
விசித்திர உலகு வலை விரிக்க
வகை தொகையாய் மாட்டி
வல்ல உயிர் வதை படுமே
மருந்தும் மாத்திரையும்
கூடிவரும் உறவினராய்
கூடு விட்டே உயிர் போகும்
அதுவரை இதன் ஆட்டமேயாம்..

ஆதிகால மனிதன்
அலைந்துலைந்து வாழ்ந்தான்
அவனே அறியா நோயெலாம்
ஆட்டிப் படைக்குது இங்கே
நாளொரு புதுமை விரிகிறது
மீளா உலகுக்கு உயிரோ
நோயென வீழ்ந்து பறக்கிறது..
சிவதர்சனி இராகவன்
30/1/2025

Nada Mohan
Author: Nada Mohan