புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

வெள்ளி விழா நிறை வாழ்த்து

இரா.விஜயகௌரி தமிழோடு எழில் கொஞ்சும் வித்தகத்தாள் வினைத்திறன் மிக்காள் இல்லறத்தில் இராகவனார் கைப்பிடித்த நிறைவான திருநாள் வெள்ளிவிழா...

Continue reading

பட்ட மரம்

சடைத்துக் குடையாய்
நிழலிட்டமரம்
சாமரம் வீசிச்
சதிராடிச் சரசரத்தமரம்
முதிர்வு கண்டு
பட்டுவிட்டது இன்று
புடைத்துப் பழுத்த கனிகாய்கள்
தூக்கணாம்குருவிக் கூடுகள் போன்றே
தொங்கியாடும்
புழுக்களும் பதுங்கி வாழும்
அழுகி வீழ்ந்தும் பழங்கள் நாறும்
கல்லெறி பட்டும்
காய்கனிகள் வீழும்
அதுகண்டு படையெடுத்த
பறவைகள் இடம்மாறும்

தங்கும் பறவைகள்
எச்சத்தால் கோலமிடும்
வந்தவர் மனமோ
வசைபாடி ஓலமிடும்
வம்பு வசை வாயாடல்
தெம்பு தந்திடும் உரையாடல்
கம்புச்சண்டை கிட்டி விளையாடல்
முன்பு நடக்கும் எப்போதும்
மூலமிழந்து நிற்கின்றதிது இப்போது

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானநதன் புது வருடம் அறுபது ஆண்டின் பிறப்பு அவனியில் வந்திடும் சிறப்பு அதிகமாய் சேர்ந்திடும் பொறுப்பு அதிகாலை வரும்வரை இருப்பு ஆலயத்தில் மருத்து நீரும் அம்மாவின் தலை முழுக்கும் அட்டிலில்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பருவத்தின் படிநிலை உருவத்தில் தளர்நிலை அனுபவம் செறிவிலே ஆனந்த மகிழ்விலே அடைகின்ற தோற்றம் ஆனந்த மாற்றம் கடந்தவை பாடமாய் கற்றவை தேட்டமாய் காலமே...

Continue reading