அகத்தினில் இன்பமே

செல்வி நித்தியானந்தன் அகத்தினில் இன்பமே ஆறுவார விடுமுறை ஓடியே சென்றதே ஆளுமை குறைந்து முடங்கிகே போனதே தாயகம் என்றதும் தனக்குள்ளே மகிழ்ச்சி தன்இயல்பு மறந்து தள்ளாடும்...

Continue reading

பட்ட மரம்

மனோகரி ஜெகதீஸ்வரன்
சடைத்துக் குடையாய்
நிழலிட்டமரம்
சாமரம் வீசிச்
சதிராடிச் சரசரத்தமரம்
முதிர்வு கண்டு
பட்டுவிட்டது இன்று
புடைத்துப் பழுத்த கனிகாய்கள்
தூக்கணாம்குருவிக் கூடுகள் போன்றே
தொங்கியாடும்
புழுக்களும் பதுங்கி வாழும்
அழுகி வீழ்ந்தும் பழங்கள் நாறும்
கல்லெறி பட்டும்
காய்கனிகள் வீழும்
அதுகண்டு படையெடுத்த
பறவைகள் இடம்மாறும்

தங்கும் பறவைகள்
எச்சத்தால் கோலமிடும்
வந்தவர் மனமோ
வசைபாடி ஓலமிடும்
வம்பு வசை வாயாடல்
தெம்பு தந்திடும் உரையாடல்
கம்புச்சண்டை கிட்டி விளையாடல்
முன்பு நடக்கும் எப்போதும்
மூலமிழந்து நிற்கின்றதிது இப்போது

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

Continue reading