பட்ட மரம்

மனோகரி ஜெகதீஸ்வரன்
சடைத்துக் குடையாய்
நிழலிட்டமரம்
சாமரம் வீசிச்
சதிராடிச் சரசரத்தமரம்
முதிர்வு கண்டு
பட்டுவிட்டது இன்று
புடைத்துப் பழுத்த கனிகாய்கள்
தூக்கணாம்குருவிக் கூடுகள் போன்றே
தொங்கியாடும்
புழுக்களும் பதுங்கி வாழும்
அழுகி வீழ்ந்தும் பழங்கள் நாறும்
கல்லெறி பட்டும்
காய்கனிகள் வீழும்
அதுகண்டு படையெடுத்த
பறவைகள் இடம்மாறும்

தங்கும் பறவைகள்
எச்சத்தால் கோலமிடும்
வந்தவர் மனமோ
வசைபாடி ஓலமிடும்
வம்பு வசை வாயாடல்
தெம்பு தந்திடும் உரையாடல்
கம்புச்சண்டை கிட்டி விளையாடல்
முன்பு நடக்கும் எப்போதும்
மூலமிழந்து நிற்கின்றதிது இப்போது

Nada Mohan
Author: Nada Mohan