பணி 89

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
04-11-2025

கண் விழிக்கும் வேளைதனில்
காத்திருக்கும் உன் பணி
கடமையை உணர்ந்து செயல்படு
காலத்தால் அழியாது உந்தன் உயர்வு

ஓடும் நதியாய் ஓடி நீவிர்
ஓயாமல் பணி செய்வாயே
காலம் கடந்தும் சரித்திரம் பேசும்
கைப்பட ஈட்டிய பணி என்றே

உள்ளத்தினால் உழைப்போமானால்
உலகில் உன்னதமாய் உயர்ந்து நிற்கும் கள்ளம் இல்லா நட்புமிங்கே
கடல் போல் நிலைக்கும் என்றும்

உழைப்பில் மனச்சாட்சி இருக்கட்டும்
ஊர் வளர்ச்சியில் மாற்றம் பிறக்கட்டும்
இதுவே உலகின் சிறந்த பணி
இனிப்பாய் பாரினில் வைக்கும் இனி!

Jeba Sri
Author: Jeba Sri

ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

Continue reading