” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

பணி 89

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
04-11-2025

கண் விழிக்கும் வேளைதனில்
காத்திருக்கும் உன் பணி
கடமையை உணர்ந்து செயல்படு
காலத்தால் அழியாது உந்தன் உயர்வு

ஓடும் நதியாய் ஓடி நீவிர்
ஓயாமல் பணி செய்வாயே
காலம் கடந்தும் சரித்திரம் பேசும்
கைப்பட ஈட்டிய பணி என்றே

உள்ளத்தினால் உழைப்போமானால்
உலகில் உன்னதமாய் உயர்ந்து நிற்கும் கள்ளம் இல்லா நட்புமிங்கே
கடல் போல் நிலைக்கும் என்றும்

உழைப்பில் மனச்சாட்சி இருக்கட்டும்
ஊர் வளர்ச்சியில் மாற்றம் பிறக்கட்டும்
இதுவே உலகின் சிறந்த பணி
இனிப்பாய் பாரினில் வைக்கும் இனி!

Jeba Sri
Author: Jeba Sri