மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

பண்டிகை வந்தாலே

சிவருபன் சர்வேஸ்வரி

பண்டிகை வந்தாலே

பண்டிகை வந்தாலே பரவசம் பாருமே //
இங்கிதமான ஆனந்தம் இகமதில் கேளும் //

சங்கீத ஸ்வரமாய் இசைப்பார்கள் கூடியே //
பண்டிகையில் பூத்தாடை எடுப்பதும் மகிழ்வே //
சின்னஞ் சிறுசுகள் சிங்காரச் சிட்டுக்கள் //
களிப்புடன் பட்டாசும் கொழுத்தியே விளையாட்டும் //

பட்டங்கள் எற்றுவதும் சவாரிகள் ஓட்டுவதும் //
போட்டிகள் வைப்பதும் வெற்றிகள் ஈட்டுவதும் //

எத்தனை நிகழ்வுகள் கலாச்சாரக் கொண்டாட்டம் //
ஆடல் பாடல் கூத்து நாடகமென்றும் //
ஆங்காங்கே தோன்றும் அரங்குகளிலே கண்மலரவும் //

வந்தாலே இத்தனையும் நடக்கும் ஆனால் //
உண்ணவும் உணவின்றி உறங்கவும் இடமின்றி//
வாழவும் வழியின்றி வாடும் நெஞ்சங்களுமுண்டு //

துன்பத்தின் சாரலில் நனையும் நிலையில் //
எத்தினம் வந்தாலும் இருண்ட இரவாகும் //

காலத்தின் லீலைகள் கழிப்பதும் கலங்குவதும் //
அத்தனையும் நீங்கிடவே ஆண்டவன் அருளட்டும்//

சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading