” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

பண்டிகை வந்தாலே

சிவருபன் சர்வேஸ்வரி

பண்டிகை வந்தாலே

பண்டிகை வந்தாலே பரவசம் பாருமே //
இங்கிதமான ஆனந்தம் இகமதில் கேளும் //

சங்கீத ஸ்வரமாய் இசைப்பார்கள் கூடியே //
பண்டிகையில் பூத்தாடை எடுப்பதும் மகிழ்வே //
சின்னஞ் சிறுசுகள் சிங்காரச் சிட்டுக்கள் //
களிப்புடன் பட்டாசும் கொழுத்தியே விளையாட்டும் //

பட்டங்கள் எற்றுவதும் சவாரிகள் ஓட்டுவதும் //
போட்டிகள் வைப்பதும் வெற்றிகள் ஈட்டுவதும் //

எத்தனை நிகழ்வுகள் கலாச்சாரக் கொண்டாட்டம் //
ஆடல் பாடல் கூத்து நாடகமென்றும் //
ஆங்காங்கே தோன்றும் அரங்குகளிலே கண்மலரவும் //

வந்தாலே இத்தனையும் நடக்கும் ஆனால் //
உண்ணவும் உணவின்றி உறங்கவும் இடமின்றி//
வாழவும் வழியின்றி வாடும் நெஞ்சங்களுமுண்டு //

துன்பத்தின் சாரலில் நனையும் நிலையில் //
எத்தினம் வந்தாலும் இருண்ட இரவாகும் //

காலத்தின் லீலைகள் கழிப்பதும் கலங்குவதும் //
அத்தனையும் நீங்கிடவே ஆண்டவன் அருளட்டும்//

சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan