நட்பென்றாலே

நட்பென்றாலே உள்ளத்தில் கள்ளமின்றி உயர்ந்ததோர் எண்ணங்கொண்டு எள்ளிநகை ஆடாமல் ஏற்றமான பண்புகொண்டு ஏற்றத்திலும் இறக்கத்திலும் மாற்றமில்லாத நிலைகொண்டு உயிர்காக்கும்...

Continue reading

நட்பென்றாலே

ராணி சம்பந்தர் பரிதவிக்கும் நேரம் புரிந்துணர்வுடனே கை கொடுப்பாரே உறங்க மறுத்த விழியை ஊக்கமிட்டு உரமூட்டித் தாகந் தீர்க்கும் தோழரே நடமாடும் மனிதர்...

Continue reading

பண்டிகை வந்தாலே

சிவருபன் சர்வேஸ்வரி

பண்டிகை வந்தாலே

பண்டிகை வந்தாலே பரவசம் பாருமே //
இங்கிதமான ஆனந்தம் இகமதில் கேளும் //

சங்கீத ஸ்வரமாய் இசைப்பார்கள் கூடியே //
பண்டிகையில் பூத்தாடை எடுப்பதும் மகிழ்வே //
சின்னஞ் சிறுசுகள் சிங்காரச் சிட்டுக்கள் //
களிப்புடன் பட்டாசும் கொழுத்தியே விளையாட்டும் //

பட்டங்கள் எற்றுவதும் சவாரிகள் ஓட்டுவதும் //
போட்டிகள் வைப்பதும் வெற்றிகள் ஈட்டுவதும் //

எத்தனை நிகழ்வுகள் கலாச்சாரக் கொண்டாட்டம் //
ஆடல் பாடல் கூத்து நாடகமென்றும் //
ஆங்காங்கே தோன்றும் அரங்குகளிலே கண்மலரவும் //

வந்தாலே இத்தனையும் நடக்கும் ஆனால் //
உண்ணவும் உணவின்றி உறங்கவும் இடமின்றி//
வாழவும் வழியின்றி வாடும் நெஞ்சங்களுமுண்டு //

துன்பத்தின் சாரலில் நனையும் நிலையில் //
எத்தினம் வந்தாலும் இருண்ட இரவாகும் //

காலத்தின் லீலைகள் கழிப்பதும் கலங்குவதும் //
அத்தனையும் நீங்கிடவே ஆண்டவன் அருளட்டும்//

சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan