பண்டிகை வந்தாலே

சிவருபன் சர்வேஸ்வரி

பண்டிகை வந்தாலே

பண்டிகை வந்தாலே பரவசம் பாருமே //
இங்கிதமான ஆனந்தம் இகமதில் கேளும் //

சங்கீத ஸ்வரமாய் இசைப்பார்கள் கூடியே //
பண்டிகையில் பூத்தாடை எடுப்பதும் மகிழ்வே //
சின்னஞ் சிறுசுகள் சிங்காரச் சிட்டுக்கள் //
களிப்புடன் பட்டாசும் கொழுத்தியே விளையாட்டும் //

பட்டங்கள் எற்றுவதும் சவாரிகள் ஓட்டுவதும் //
போட்டிகள் வைப்பதும் வெற்றிகள் ஈட்டுவதும் //

எத்தனை நிகழ்வுகள் கலாச்சாரக் கொண்டாட்டம் //
ஆடல் பாடல் கூத்து நாடகமென்றும் //
ஆங்காங்கே தோன்றும் அரங்குகளிலே கண்மலரவும் //

வந்தாலே இத்தனையும் நடக்கும் ஆனால் //
உண்ணவும் உணவின்றி உறங்கவும் இடமின்றி//
வாழவும் வழியின்றி வாடும் நெஞ்சங்களுமுண்டு //

துன்பத்தின் சாரலில் நனையும் நிலையில் //
எத்தினம் வந்தாலும் இருண்ட இரவாகும் //

காலத்தின் லீலைகள் கழிப்பதும் கலங்குவதும் //
அத்தனையும் நீங்கிடவே ஆண்டவன் அருளட்டும்//

சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

Continue reading

செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

Continue reading