பள்ளிப் பருவத்திலே…

ரஜனி அன்ரன் (B.A) பள்ளிப் பருவத்திலே…… 22.05.2025

வாழ்வின் முதற்படி
வரலாற்றுப் பதிவின் சரிதம்
வாழ்வின் வரமான பள்ளிச்சாலை
புள்ளிமானைப் போல துள்ளித் திரிந்தகாலம்
துயர் மறந்த தருணம்
பாடம்படிப்பு விளையாட்டு நடனமென
பவனி வந்தகாலம் இனிய பள்ளிப்பருவம் !

காலத்தைமுந்தி ஓடியகனவுகள்
வெற்றியின் இலக்கினைத் தேடியநாட்கள்
வெற்றிக்கான பயிற்சியின் காலமது
புலரும் பொழுதினில் புன்னகைசிந்தி
மலரும் நினைவுகள் அரும்பிய பருவம்
மனதை நிறைத்த மகிழ்வின் பயணம்
பள்ளியென்ற பொக்கிஷக்காலம் !

பன்னிரெண்டு ஆண்டுப் பயணம்
கண்ணிரெண்டில் ஆடுதே இன்னும் நிழலாக
படித்தபள்ளியில் எனைப்படிப்பித்த ஆசான்களோடு
பாடம் படிப்பித்தகாலம் பொற்காலமே
என்வாழ்வின் பொற்காலமே !

ராணி சம்பந்தர் நாலும் சேர்க்குமே நல்லுறவு அல்லும் பகலுமே பாடுபடவே கல்லும் கனியாகும் கூட்டுறவு சொல்லும் செயலும் பல்லுறுதி கொல்லும்...

Continue reading

ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

Continue reading