பாசப்பகிர்வினிலே……58

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-05-2025

மனசுக்குள் தேனாய் ஒரு பாசம்
மௌனத்தின் நிழலான நேசம்
மனையாளும் அதிபதியும் தானே
மன்னிக்கும் பெண்ணவளும் நீயே

பொறுமையின் பொக்கிஷமும்
பொல்லாமை நீக்குபவளும்
கண்ணாய்க் காப்பவளும்
காவல் தெய்வமும் தானே

பல பிள்ளை பெற்றாலும்
பாரபட்சம் அன்றி நிலையான
பாசப்பகிர்வினிலே திகைக்க வைத்து
தித்திக்க வைப்பவரே அம்மா….

திகட்டாத அன்போடு
தினந்தோறும் பாசப்பகிர்வினிலே…
சொல்லில் வடிக்க முடிக்கா
சொல் தொடரோடு தலைவணங்கி!

என் அம்மாவோடு, அனைத்துலக
அம்மாக்களுக்கும் மனநிறைந்த
அன்னையர் தின வாழ்த்துகள்
உரித்தாகட்டும்…..

Jeba Sri
Author: Jeba Sri

வசந்தா ஜெகதீசன் அறிவாலயம் அனலானதே .... காலத்தின் பெட்டகமே காவியத்தின் பொக்கிசமே கடைக்கழக நூல்களின் தேட்டத்து நூலகமே எண்ணற்ற பதிவுகளால் பூத்திருந்த பூஞ்சோலை காடையரின்...

Continue reading