பாரதி நீ ஒருசாரதியே!

நகுலா சிவநாதன்

பாரதி நீ ஒருசாரதியே!

சரித்திரம் படைத்த பாரதி நீயே
சங்கதி சொன்ன வீரனே நீயே
பாதகம் செய்யும் துட்டரை விலத்தி
பண்போடுழை வளர்த்திட்ட வள்ளல்

நாதமாய்த் தமிழை நன்றாய்ப்; பாட
வேதமாய் ஆக்கிய விந்தை மனிதா!
சோதனை வந்து தொட்டிட்ட போதும்
சோர்ந்திடா கவிஞன் நீயன்றோ!

பாரதி என்ற சாரதி நீயே
பண்பாய் வாழ வழியது சொன்னாய்
நாவலர் போற்றும் நற்றமிழ்ப் புலவா!
நன்றே உன்கவி நாளை வாழும்

ஞாலம் போற்றும் நற்தமிழ்புலமை
கோலம் போடும் கொள்கை மாறா
பாலம் அமைக்கும் பைந்தமிழாலே
பாரில் புதுமை செய்திடுவோம்

நகுலா சிவநாதன்1777

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

Continue reading