பாரதி நீ ஒருசாரதியே!

நகுலா சிவநாதன்

பாரதி நீ ஒருசாரதியே!

சரித்திரம் படைத்த பாரதி நீயே
சங்கதி சொன்ன வீரனே நீயே
பாதகம் செய்யும் துட்டரை விலத்தி
பண்போடுழை வளர்த்திட்ட வள்ளல்

நாதமாய்த் தமிழை நன்றாய்ப்; பாட
வேதமாய் ஆக்கிய விந்தை மனிதா!
சோதனை வந்து தொட்டிட்ட போதும்
சோர்ந்திடா கவிஞன் நீயன்றோ!

பாரதி என்ற சாரதி நீயே
பண்பாய் வாழ வழியது சொன்னாய்
நாவலர் போற்றும் நற்றமிழ்ப் புலவா!
நன்றே உன்கவி நாளை வாழும்

ஞாலம் போற்றும் நற்தமிழ்புலமை
கோலம் போடும் கொள்கை மாறா
பாலம் அமைக்கும் பைந்தமிழாலே
பாரில் புதுமை செய்திடுவோம்

நகுலா சிவநாதன்1777

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading