சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

பாரதி நீ ஒருசாரதியே!

நகுலா சிவநாதன்

பாரதி நீ ஒருசாரதியே!

சரித்திரம் படைத்த பாரதி நீயே
சங்கதி சொன்ன வீரனே நீயே
பாதகம் செய்யும் துட்டரை விலத்தி
பண்போடுழை வளர்த்திட்ட வள்ளல்

நாதமாய்த் தமிழை நன்றாய்ப்; பாட
வேதமாய் ஆக்கிய விந்தை மனிதா!
சோதனை வந்து தொட்டிட்ட போதும்
சோர்ந்திடா கவிஞன் நீயன்றோ!

பாரதி என்ற சாரதி நீயே
பண்பாய் வாழ வழியது சொன்னாய்
நாவலர் போற்றும் நற்றமிழ்ப் புலவா!
நன்றே உன்கவி நாளை வாழும்

ஞாலம் போற்றும் நற்தமிழ்புலமை
கோலம் போடும் கொள்கை மாறா
பாலம் அமைக்கும் பைந்தமிழாலே
பாரில் புதுமை செய்திடுவோம்

நகுலா சிவநாதன்1777

Nada Mohan
Author: Nada Mohan