பாலதேவகஜன்

பகலவன்

உலகம் ஒளிர
ஒருவன் நீயே!
உயிர்கள் வாழ
உறுதுணையும் நீயே!

உதிக்கும் உனையே
துதித்தே நிற்போம்
உழவரின் தோழனாய்
உனையே வைப்போம்.

பிணியின் மருந்தாய்
ஒளி தரும் கதிர்கள்
பனியின் படர்வை
உருக்கும் கதிர்கள்.

பகலவன் கதிர்மழை
புத்துணர்சி தருமே
பார்வைகள் துலங்கிட
பேரொளி வரமே!

இரவை நீக்கி
இன்பம் அளிப்பான்
இவனே உலகின்
இணையில்லா சொத்து.

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் அறிவாலயம் அனலானதே .... காலத்தின் பெட்டகமே காவியத்தின் பொக்கிசமே கடைக்கழக நூல்களின் தேட்டத்து நூலகமே எண்ணற்ற பதிவுகளால் பூத்திருந்த பூஞ்சோலை காடையரின்...

    Continue reading